Sunday, March 15, 2020

எங்கள் தலைமை ஆசிரியர் கி.வச்சிரவேலு - போய் வாருங்கள் ஐயா


போய் வாருங்கள் ஆசானே.

காஞ்சிபுரம் ஸ்ரீ வாணி நிலையம் நடுநிலைப்பள்ளியில் எங்களை காது தொடச்சொல்லி சேர்த்தீர்.

எட்டு ஆண்டுகள், பள்ளியின் இருண்ட சிறு அறைகளில், எங்களுக்கு கல்வி விளக்கு ஏற்றினீர்.

தனி வகுப்புகள், சனி ஞாயிறு சிறப்பு வகுப்புகளில் உங்கள் நகைச்சுவைகளில்  வகுப்பறை கலகல என்றே களை கட்டும்.

வெள்ளிக்கிழமை மாலை வரையிலும் சனி பள்ளி உண்டா இல்லையா என்ற இரகசியத்தை  காப்பீர்.

பல நூறு இனிய நினைவுகள் அள்ளித் தந்த பள்ளி உமது.

எங்கள் தமிழும் ஆங்கிலமும் நீங்கள் வழங்கியவையே. மாதந்தோறும் நடக்கும் மாணவர் மன்றங்களும், பல்வேறு போட்டிகளுமே எங்களை இந்த உலகிற்கு  தயார்ப்படுத்தியவை.

வேறு பள்ளிகளுக்கு சென்ற பின்பே, அப் பள்ளி ஆசிரியர்களின் பெருமையான  பார்வையில்தான் உங்கள் பள்ளியின் அருமை உணர்ந்தோம்.

பகுத்துண்டு பல்லுயிர் ஒப்புதல் நூலோர் 
தொகுத்தவற்றுல் எல்லாம் தலை.

நீங்கள் மதிய உணவில் சொல்லித் தந்த குறள் இன்றும் எங்கள் மதிய வேளைகளில் மனதில் எதிரொலிக்கிறது.

உங்களிடம் வாங்கிய அடிகளை, மிகவும் பெருமையாகவே சொல்கிறோம் எங்கள் பிள்ளைகளுக்கு.

பெற்றோரைப் போலவே எங்களை நேசித்த  உங்களையும், பிற ஆசிரியர்களையும்  பெற்ற நாங்கள் என்றும் மகிழ்வுடன்  சொல்வோம், நாங்கள் உங்கள் மாணவர்கள் என்று.

நிறை வாழ்வு வாழ்ந்தீர்  ஐயா. பல்லாயிரம் பிள்ளைகளின் வாழ்வில் விளக்கேற்றியுள்ளீர். வெகு சிலருக்கே கிடைக்கும் பெரு வாழ்வு உமது.

நன்றியை  எங்களால்  வார்த்தைகளால்  சொல்ல இயலாது. எங்கள் முன்னேற்றத்திலும் நல்ல தன்மைகளிலும்  உங்கள் வார்த்தைகளும்  பேருழைப்பும் என்றென்றும் இருக்கும்.

போய் வாருங்கள் ஐயா. கண்ணீரோடு விடை கொடுக்கிறோம்.


6 comments:

anandhaganesh said...

நல்ல வரிகள் மகிழ்ச்சி.

Unknown said...

சிறப்பான தலைமை ஆசிரியர்

Gayathri said...

வாழ்வு தந்த வள்ளல்

Senthil said...

அருமை உண்மை

Jegannathan Kannan said...

Poramboku sethan

Jegannathan Kannan said...

I never Sean a worest teacher like him in my life time.first of all he don't know how to teach. He know only beat the poor children.headweight fellow. Memorising skill is education to his dictionary.he will never get rest in peace. All children are never same. Each individual have unique talent. Because of him still I am not able to lose my feare.