Friday, October 18, 2013

டிஸ்கவரி புக் பேலஸ்-ன் 5-ம் ஆண்டு விழாவும், படி அமைப்பின் 4-ம் நிகழ்வும்


இந்திய லினக்ஸ் பயனர் குழு , சென்னை - செப்டம்பர் 7 2013 சந்திப்பு


இந்திய லினக்ஸ் பயனர் குழு , சென்னை - செப்டம்பர் 2013 சந்திப்பு

நாள் - 19.10.2013 , 3.00 - 6.00 PM

இடம் -
Classroom No 1,
Aero Space Engineering,
Near Gajendra Circle,
IIT Madras.Link for the Map: http://bit.ly/iitm-aero


உரை தலைப்புகள்:
1. Introduction to Ruby On Rails Web Framework
2. Ubuntu Linux 13.10 Release Party
3. Getting more volunteers for ILUGC

அனுமதி இலவசம். அனைவரும் வருக.

முழு விவரங்கள் இங்கே :

http://ilugc.in/content/ilugc-monthly-meet-oct-19-2013/

Tuesday, October 08, 2013

மஹாபாரதம்--தமிழ் மொழிபெயர்ப்பு--மறு வெளியீடு குறித்த ஒரு வேண்டுகோள்

கும்பகோணம் பதிப்பு என்றறியப்படும் பதிப்பை வெளியிட்டுள்ள திரு
வெங்கடரமணன் என்ற தனிநபர், எவ்வளவோ பொருளாதார நெருக்கடிகளுக்கிடையில்,
தன்னுடைய பாட்டனார் காலத்தில் எடுத்த முயற்சியைப் பதிப்பு காணச் செய்து,
இதிகாச தாகம் கொண்ட அனைவருடைய தாகத்தையும் தணிவித்தார். இப்போது, அந்தப்
பதிப்பில் உள்ள ஒன்பது தொகுதிகளும் சேர்த்து வாங்க வேண்டும் என்ற
தவிப்புள்ளவர்களுக்கு, கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இந்தத்
திட்டத்தில் ஏற்படக்கூடிய பொருட்செலவும், முதலீடும், மிகமிக நடுத்தரக்
குடும்பத்தைச் சேர்ந்த பதிப்பாளரால் இயலாத ஒன்றாகப் போயிருக்கிறது.

குறைந்தபட்சம் இவ்வளவு பிரதிகளாவது விற்குமென்றால், மறுபதிப்பில்
இறங்கும் தைரியம் வரும் என்கிறார் வெங்கடரமணன். கடந்த முறை சென்னையில்
அவரைச் சந்தித்த போதும், மூன்று நான்கு நாட்களுக்கு முன்னால் தொலைபேசி
உரையாடலின் போதும் இதைத்தான் குறிப்பிட்டார். நான் இந்த வாழ்வில்
சந்தித்தவர்களில், இவ்வளவு பெரிய காரியத்தைத் தனியொரு ஆளாய்ச்
சாதித்தும், தலைகீழாக நிற்கத் தெரியாத நபர். எளிமையும் உண்மையும்
கொண்டவர். இவருக்குத் துணிவூட்டுவதற்காக நண்பர் மாரியப்பன் பால்ராஜ், பல
குழுக்களிலும் வலைத்தளங்கலிலும் விடாப்பிடியாக எழுதி வருகிறார். பத்து
நிமிடங்களுக்கு முன்னால் அவரிடமிருந்து வந்திருக்கும் வேண்டுகோளை இங்கே
உங்கள் பார்வைக்குச் சமர்ப்பிக்கிறேன். இது என் வேண்டுகோளும் கூட.
நான்கு நண்பர்கள் சேர்ந்து ஒருவேளை பார்ட்டிக்கு செலவழிக்கும் பணத்தை விட
மிகக் குறைவான தொகைதான் இது. குடும்பத்தோடு இரண்டு சினிமா பார்க்க ஆகும்
செலவு என்றும் சொல்லலாம். அவையெல்லாம் ஒரே ஒருவேளைக்கு இன்பம் பயப்பன.
இது நீடித்து, தலைமுறைக்கும் நன்மை பயக்கக் கூடியது. இதில் பங்கேற்று
வடம்பிடிக்க நண்பர்கள் முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இனி
மாரியப்பன் பால்ராஜின் வேண்டுகோள், கீழே:

தமிழில் மிகச் சிறந்த மொழிபெயர்ப்பாக சொல்லப்படும் மஹாபாரத கும்பகோணப்
பதிப்பு தற்போது அச்சில்இல்லை என்பது மிகவும் வருந்தத்தக்க விஷயம்.
இந்நூல் சமஸ்கிருதத்திலும் தமிழிலும் நன்கு தேர்ச்சி பெற்ற பல அறிஞர்
பெருமக்களால் நேரடியாக சமஸ்கிருதத்தில் இருந்து ஒரு லட்சம் சுலோகங்கள்
கொண்ட முழு வியாச பாரதமும் (பதினெட்டு பருவங்களும்) தமிழில்
மொழிபெயர்க்கப்பட்டு ம.வீ. இராமானுஜாசாரியார் அவர்களால் தொகுக்கப்பட்டன.
மஹாபாரதம் எளிய தமிழ் மக்களையும் சென்று சேர வேண்டும் என்பதற்காக தங்கள்
வாழ்நாளின் பெரும்பகுதியைப் பல அறிஞர் பெருமக்கள் இந்தப் பணிக்காகச்
செலவழித்துள்ளனர். இம்மொழிபெயர்ப்பு ஏறக்குறைய இருபத்தைந்து வருடங்கள்
நடைபெற்றன. ஒருவர் மொழிபெயர்ப்பது அவராலேயே சரி பார்ப்பது பிறகு இரண்டு
சமஸ்கிருத அறிஞர்களால் மீண்டும் சரிபார்ப்பது என்று மிகுந்த கவனத்துடனும்
அக்கறையுடனும் செய்யப்பட்ட மொழிபெயர்ப்பு. ஸ்ரீசக்ரா பப்ளிகேஷன்
திரு.வெங்கட்ரமணன் அவர்கள் குறைந்தது நூறு பேர் முன்வந்து வாங்க
விரும்புவதாக தெரிவிக்கும்போது இதற்கான முன் வெளியீட்டுத் திட்டத்தை
வெளியிட்டு மூன்று நான்கு மாதங்களில் அச்சில் கொண்டு வருவதாகவும்
சொல்லியிருக்கிறார். இதைத் தங்களுக்குத் தெரிந்த நண்பர்களுக்கும்
குழுமங்களுக்கும் தயை கூர்ந்து பரிந்துரைக்கவும். விலை ரூ.5000
இருக்கலாம். உண்மையில் மஹாபாரதம் படிக்கும் ஆர்வம் உள்ளவர்களுக்கு விலை
மதிப்பற்ற பொக்கிஷம் என்பதைக் கவனித்தில் கொள்ள வேண்டும். ஸ்ரீசக்ரா
பப்ளிகேஷன் திரு. வெங்கட்ராமணன் அவர்களை 09894661259 என்ற எண்ணில்
தொடர்பு கொள்ளலாம். அல்லது venkat.srichakra6@gmail.com என்ற
மின்னஞ்சலுக்குத் தங்களது பெயர், முகவரி, தொலைபேசி எண்ணுடன் ஒரு
மின்னஞ்சல் அனுப்பி தாங்கள் வாங்க விரும்புவதாகத் தெரிவிக்கலாம்.
குறைந்தது நூறு பேர் தங்களது பெயரை பதிந்தவுடன் திரு.வெங்கட்ரமணன்
அவர்கள் இதைப்பற்றிய முன்வெளியீட்டுத் திட்டத்தையும் எவ்வளவு பணம்
செலுத்த வேண்டும் எப்படிச் செலுத்த வேண்டும் போன்ற விவரங்களையும்
அறிவிப்பார். ஆதலால் நண்பர்கள் விரைந்து தங்களது விருப்பத்தைத்
தெரிவித்து ஆதரவளிக்குமாறு அன்புடனும் பணிவுடனும் கேட்டுக் கொள்கிறேன்.

பங்கேற்கும் அனைவரையும் வாணி ஆசிர்வதிப்பாளக.
--
அன்புடன்,
ஹரிகி.

Friday, October 04, 2013

GIMP மற்றும் INKSCAPE பயிற்சி


அன்புடையீர், கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை தமிழ்நாடு(FSFTN), வரும் ஞாயிறு(அக்டோபர் 6) அன்று  வரைகலை மென்பொருட்கள் GIMP மற்றும் INKSCAPE பயிற்சி வகுப்பினை நடத்தவுள்ளது.

இடம்:
கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை தமிழ்நாடு அலுவலகம்,
பழைய எண்:36, புது எண்:24, பிலாட் எண்:2, முதல் மாடி பி பிலாக்,
சில்வர் பார்க் அபார்ட்மென்ட்ஸ், தனிகாச்சலம் சாலை, டி.நகர், சென்னை – 17

No: 36 (Old No: 24), Flat No: 2, First Floor, B Block,Silver Park Apartments, Thanikachalam Road, T. Nagar, Chennai - 17]


நாள்: ஞாயிறு(அக்டோபர் 6)
நேரம்: காலை 10 மணி முதல்.

கட்டணம்: ரூ 100, புதிதாக FSFTN பயிற்சி வகுப்புக்கு வருபவர்கள் மட்டும் செலுத்த வேண்டும். மற்றவர்கள் விரும்பினால் கட்டணம் செலுத்தலாம்.

பயிற்சி வகுப்பில் பதிவு செய்து கொள்ள: https://docs.google.com/forms/d/1sd0YeDWuZLxnNXdPw3XzeqtwvgYRXxVcOSbNy0cfpKE/viewform

GIMP மற்றும் INKSCAPE உங்கள் Laptop ல் நிறுவி கொள்ள:
GIMP---http://www.gimp.org/downloads/ I
NKSCAPE-- http://inkscape.org/download/?lang=en

தொடர்பு கொள்ள: அலுவலகம்: 044 43504670 ராஜ் ஆனந்த்: 9566152513

மதிய உணவு கொண்டு வரவும்

http://fsftn.org/content/session-gimp-and-inkscape







குறும்பட - ஆவணப்படப் போட்டி


Thursday, October 03, 2013

ரூபாய் 25000 பரிசு தரக் காத்திருக்கும் நாவல் போட்டி

ஐக்யா டிரஸ்ட் ஆதரவுடன் இணையவெளி ஏடும், தாரிணி பதிப்பகமும் இணந்து
நடத்தும் மகத்தான நாவல் போட்டி !

நல்ல நாவல் எழுதுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருவது
உயிரோட்டமுள்ள ஓர் மொழிக்கு இழுக்கு ஆகும். நமது அண்டை மாநிலங்களான
ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய பகுதிகளில் மிகச் சிறந்த நாவல்கள்
ஆண்டுதோறும் பெருகி வருகின்றன. அங்கெல்லாம் செயல்படும் மாநில,
மத்தியசாஹித்திய அமைப்புக்களில் கூடுமானவரை நேர்மை, அரசியல் மற்றும் பிர
செல்வாக்குகள் தலையிடாமை நாவல் வளர்ச்சிக்கு முக்கிய காரணம்.

தனி அமைப்புக்கள் தலை எடுத்தால் தவிர தமிழ் நாவலைக் காப்பாற்ற முடியாது
என்ற நிலை வந்துள்ளது. அதைப் போக்கக் கருதி இணையவெளி ஏடும் தாரிணி
பதிப்பகமும் இணந்து நாவல் போட்டியை நடத்த முடிவு செய்துள்ளன.

நிபந்தனைகள் :-

01. ஏதேனுமொரு நுண்கலையை மையமாகவோ சுற்றுச் சூழலாகவோ வைத்து எழுதப்படும்
நாவலுக்கு ரூ.12,500-ம்

02. முற்றிலும் புலம் பெயர்ந்த சூழலில் வாழ்வோர் வாழ்க்கை பற்றிய
நாவலுக்கு ரூ.12,500-ம் வழங்க்கப்படும்.

03. வயது வரம்பே கிடையாது

04. பக்க வரம்பும் கிடையாது.

05. புது முகம் பழைய முகம் யார் வேண்டுமானாலும் எழுதலாம்

07. ஓர் எழுத்தாளர் ஒரு நாவல் மட்டுமே அனுப்ப வேண்டும்

08. சரித்திரம், சமூகம், அறிவியல் புதினங்களும் வரவேற்கப்படுகின்றன.

09. பரிசு பெறும் நாவல் தவிர மற்றவற்றில் தகுதியுடையன புத்தக வடிவம் பெறும்

10.எந்த ஒரு படைப்பையும் ஈமெயில் மூலமோ குறுந்தகடு மூலமோ மட்டுமே அனுப்பவேண்டும்

11. எந்த ஒரு படைப்பின் மூலக்கரு மற்றும் மொழி நடை முற்றிலும் கவனத்தோடு
பாதுகாக்கப்பட்டு உரிமைக்காப்பு தரப்படும்

12. ஏற்கனவே வந்த எந்த நாவலின் சாயலும் இல்லாதவாறு அமைவது நலம்

13. புத்தம் புதிய கதைக் களம்..புத்தம்புதிய கதைக்கரு மிக முக்கியம்

14. 2014 மார்ச் 31 முடிவு தேதி. பரிசு 04-09-2014-ல் உறுதியாக வழங்க்கப்படும்

பிற விபரங்க்கட்கு :- vaiyavan.mspm@gmail.com

விக்கிப்பீடியா பயனர்கள் அனைவரது பார்வைக்கும் பரிந்துரைக்கப்படுகின்றது.
தாங்களும் எழுதலாம். திறமையுடையோருக்கும் பரப்புரை செய்யலாம்.

அன்புள்ள , சங்கர இராமசாமி, பயனர் :-rssairam

https://ta.wikipedia.org/s/o

Wednesday, October 02, 2013

கும்பகோணம் - அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ் விக்கிப்பீடியா பயிலரங்கம்

கும்பகோணம் - அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்
விக்கிப்பீடியா பயிலரங்கம்

கல்லூரி மாணவர்களுக்குத் தமிழ் விக்கிப்பீடியா தொகுப்புப்பணிகளில்
ஈடுபாட்டை ஏற்படுத்துதல், தமிழ் விக்கிப்பீடியா குறித்த செய்முறை
விளக்கம் அளித்தல், ஐயங்களைதல் என்னும் நோக்கத்திற்காக,
கும்பகோணத்திலிருந்து 6 கிமீ தொலைவில் உள்ள கோயிலாச்சேரியில்,
காட்சித்தொடர்பியல் துறையின் சார்பில் தமிழ் விக்கிப்பீடியா பயிலரங்கம்,
இக்கல்லூரியின் கருத்தரங்கக்கூடத்தில்
11.10.2013 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை நிகழ உள்ளது.

இந்நிகழ்வில் முதலாமாண்டு மாணவர் அருள் பிரான்சிஸ் வரவேற்புரை
நிகழ்த்தவும், அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர்.ச.
மணி சிறப்புரை நிகழ்த்தவும், தமிழ் விக்கிப்பீடியா திட்டங்களில் கல்லூரி
மாணவர்களின் பங்கேற்பு குறித்த தலைமையுரையை சேலம், பெரியார் பல்கலைக்கழக
இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறை பேராசிரியர். மா. தமிழ்ப்பரிதி
நிகழ்த்தவும், முதலாமாண்டு மாணவர் ப.சிவராமன் நன்றியுரை நிகழ்த்தவும்
உள்ளனர்.

இந்நிகழ்வில், தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம், தமிழ் விக்கிப்பீடியா
திட்டங்கள் , தமிழ் விக்கிப்பீடியா தொகுத்தல் பணி, தமிழ்க்கணினி
அறிமுகம், தமிழ்க்கணினியின் தேவை, தமிழ் இயங்கு தளங்கள், தமிழ்
மென்பொருட்கள், தமிழ் எழுத்துரு, தமிழ் ஒருங்குகுறி, தமிழ்
ஒருங்குகுறியின் பயன்கள், தமிழ் வலைப்பூ உருவாக்கம், திறந்தநிலை
இயங்குதளங்கள் மற்றும் மென்பொருட்கள், ஒலிக்கோப்பு, ஒளிப்படங்கள்,
காணொளிகளின் பயன்பாடுகள் மற்றும் அவற்றை விக்கிப்பீடியா திட்டங்களில்
இணைக்கும் முறைகள் குறித்த நேரிடை செயல்முறைப்பயிற்சி அளிக்கப்படும்.

இந்நிகழ்வில், பங்கேற்க ஆர்வமுள்ளவர்கள் 9047655025, 9750933101 ஆகிய
எண்களில் தங்களின் பெயரைப் பதிவு செய்து நிகழ்வில் பங்கேற்கலாம்.