Thursday, January 16, 2020

பொங்கல் வாழ்த்து அட்டைகள் 2020

மூன்றாவது ஆண்டாக இந்த வருடமும் பொங்கல் வாழ்த்து அட்டைகளை உருவாக்கி நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் அனுப்பியுள்ளோம்.

வியன், இயல், அவர்களது நண்பர்கள் மொத்தமாக வரைந்து தள்ளி விட்டனர்.

மொத்தமாக அஞ்சலகத்தில் அஞ்சல் அட்டை வாங்கப்போனால், அவர்களே ஒரு மாதிரியாகப் பார்த்து இல்லை என்று சொல்லி விட்டனர். மறுநாள் அருகில் உள்ள அம்மன் மளிகை கடை அண்ணன் அவரிடம் இருந்த அனைத்து அட்டைகளையும் மகிழ்வுடன் தந்து உதவினார்.

குழந்தைகளுக்கு மிக இனிய நிகழ்வாக இருந்தது. வியன் கிறுக்கல்களில் இருந்து நன்றாக வரையும் நிலைக்கு வளர்ந்துள்ளது மகிழ்வளிக்கிறது.

இயல் முதல்முறையாக தபால் பெட்டியைப் பார்த்து நிறைய கேள்விகள் கேட்டாள். இருவருமே வியப்புடன் தபால் பெட்டியில் வாழ்த்து அட்டைகளைப் போட்டனர்.

அவர்களது பால்ய காலங்களை இனிய தருணங்களால் நிரப்புவதில் எங்களுக்கும் பெரு மகிழ்ச்சி.

அடுத்த ஆண்டு உங்களுக்கும் வாழ்த்து அட்டை வேண்டுமெனில் உங்கள் முகவரியை எனக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள். (tshrinivasan@gmail.com) நீங்களும் யாருக்கேனும் வாழ்த்து அட்டை அனுப்புங்கள்.












No comments: